விசேட செய்தி
எல்லை தாண்டி மீன் பிடித்த 19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 19 இந்திய மீனவர்கள் இன்று(08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் பயணித்த 2 மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட 19 மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.