BREAKING NEWS

“அவமானப்படுத்தப்பட்டேன்!” – ஓய்வு குறித்து மௌனம் கலைத்த யுவராஜ் சிங்.

AD
admin in விளையாட்டு
Report

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், தனது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பைக்கு முன்னதாக, அப்போதைய தலைவர் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தனது எதிர்காலம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் ஓரம் கட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்வாகம் மௌனம் காத்த நிலையில், தோனி மட்டுமே தனக்கு அணியில் இடமில்லை என்ற உண்மையை நேரடியாகக் கூறி தெளிவுபடுத்தியதாக யுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை வலுக்கட்டாயமாக ஓய்வு பெறச் செய்ய ‘யோ-யோ’ உடற்தகுதித் தேர்வில் தோல்வியடையச் செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அதில் தேர்ச்சி பெற்றுத் தனது திறமையை நிரூபித்ததாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஜாகீர் கான், சேவாக் போன்ற மூத்த வீரர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.