விசேட செய்தி

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை இன்று(22) ஆரம்பம்.

இந்த வருடம் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று(22) ஆரம்பமாகின்றது.

இதற்கான நிகழ்வு எம்பிலிப்பிட்டிய போதிராஜா வித்தியாலயத்தில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெறவுள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மாகாண மட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button