விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினருக்கு 15 இலட்சம் ரூபா இழப்பீடு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடலுக்கு மதத் தலைவர்கள், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆராச்சிகட்டுவையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் நாளை (28) பிற்பகல் 2 மணிக்கு ஆராச்சிகட்டுவ ராஜக தளுவ தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடியின் குடும்பத்தினருக்கு 15 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், சார்ஜன்டாக நேற்று பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
அதிவேக வீதியில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடியும் உயிரிழந்தனர்.