இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (06) மேலும் 1133 பேர் பூரணமாக குணமடைந்து
வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 62,594 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
5,315 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


