பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதற்கான தீர்மானமில்லையென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்குமாறு கோருவது நியாயமான செயலல்லவென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் பாணின் விலையை அதிகரித்திருந்தால் அது பற்றி நுகர்வோர் அதிகார சபைக்கு முறையிடுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


