ஆனமடுவ போதிக்கட்டுவ பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நவகத்தேகம பகுதியிலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிச் சென்ற லொறியொன்றும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இருவரும் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவ பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.