நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் நேற்று(31) அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,484 ஆக அதிகரித்துள்ளது.
