மஹர சிறைச்சாலை வளாகத்துக்குள் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் கடும் பிரயத்தனம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு வெளியே குவிந்துள்ளனர் என தெரியவருகின்றது.
மஹர சிறைச்சாலையில் இன்று (29) மாலை ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், கைதி ஒருவர் பலியாகியுள்ளார். இன்னும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளனர்.
எனினும், பதற்றம் இன்னுமே தனிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன