கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3230 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 3363 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர்களில் 120 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.