கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதால், குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை மாத குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு குழுவினரால், மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இதன்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த தம்பதியினரும் இன்று பிற்பகல் 2 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.