தரம் 6 முதல் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.
காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 5 ஆம் தரம் வரையான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் மூடப்பட்டதுடன், பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.