அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 01, 02, 03, 07,08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் 10 மணிநேரத்துக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என
குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த குறைந்த அழுத்த நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.